சென்னை: கோயில் சிலைகளை பாதுகாக்க ஸ்ட்ராங் ரூம் கட்டப்பட்டது குறித்து 3 வாரத்தில் அறிக்கை தர ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. கோயில்களை பாதுகாப்பது தொடர்பாக தாமாக முன்வந்து விசாரித்த வழக்கில் தமிழ்நாடு அரசுக்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. கோயில் சிலை பாதுகாப்பு, சொத்து மீட்பு உள்ளிட்ட 75 உத்தரவுகளில் 38 உத்தரவுகள் செய்ல்படுத்தப்பட்டு உள்ளன என அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது. நீதிமன்ற உத்தரவுகளை அமல்படுத்தியது தொடர்பாக அறிக்கை அளிக்க வழக்கை ஒத்திவைத்து ஐகோா்ட் உத்தரவிட்டுள்ளது.