சென்னை : நவ.1-ம் தேதியில் இருந்து 1 முதல் 8-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் பழைய பஸ் பாஸ் காட்டி பயணிக்கலாம் என போக்குவரத்துறை சார்பில் கூறப்பட்டுள்ளது. பழைய பஸ் பாஸ், பள்ளி அடையாள அட்டையை காண்பித்து மாணவர்கள் பேருந்துகளில் பயணம் மேற்கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. பள்ளி மாணவர்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகள் போக்குவரத்துத்துறை சார்பில் வெளியிடப்படும் என கூறப்பட்டுள்ளது.