சென்னை: சென்னையில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் மெட்ரோ ரயிலில் டோக்கனுக்குப் பதில் டிக்கெட் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. சென்னையில் தினசரி மெட்ரோ ரயில் சேவையை 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பயன்படுத்தி வருகின்றனர். விடுமுறை மற்றும் திருவிழா நாட்களில் இந்த மெட்ரோ சேவையை பயன்படுத்துவோரின் எண்ணிக்கை 1 லட்சம் வரையில் காணப்படும். இந்நிலையில், கொரோனா பரவலை தடுக்க சுழற்சி முறையில் பயன்படுத்தப்படும் டோக்கன் நடைமுறையை மாற்றி கியூ ஆர் கோட் பொறிக்கப்பட்ட காகித டிக்கெட் நடைமுறையை கொண்டுவர மெட்ரோ ரயில் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.