கடலூர் வேளாண் உர உற்பத்தி அலுவலகத்தில் திடீர் தீ விபத்து

கடலூர்:  கடலூர் செம்மண்டலத்தில் வேளாண் உயிர் உர உற்பத்தி மையம் உள்ளது. இந்த வளாகத்தில் உள்ள அலுவலகத்தில் இருந்து நேற்று காலை திடீரென புகை வெளியேறியது. இதை பார்த்த அங்கு பணிபுரியும் ஊழியர் ராஜசேகர் கடலூர் வேளாண்மை மூத்த அலுவலர் முகமது நிஜாமுக்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்தார். இதையடுத்து அவர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்த்தார். இந்நிலையில் திடீரென்று அலுவலகத்தில் தீப்பிடித்து எரியத் தொடங்கியது. தகவலறிந்த கடலூர் தீயணைப்புத்துறையினர் வந்து தீயை அணைத்தனர். இதில் அலுவலகத்தில் இருந்த உயிர் உரம் தயாரிக்கும் இயந்திரம், ஏசி, அலுவலக கோப்புகள் மற்றும் அங்கிருந்த மரப்பொருட்கள் எரிந்து நாசமாகியது. சேத மதிப்பு ரூ. 8 லட்சம் ஆகும்.

Related Stories: