சென்னை: தமிழகம் முழுவதும் நேற்று 6வது மெகா தடுப்பூசி முகாம் நடந்தது. சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் உள்ள தடுப்பூசி முகாமை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டார். நிகழ்ச்சியில் ஓமந்தூரார் பன்நோக்கு மருத்துவனை டீன் ெஜயந்தி மற்றும் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். பின்னர் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மை செயலாளர் ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகம் முழுவதும் 1.4 கோடி முதியவர்கள் இருக்கும் நிலையில் அதில் 47 லட்சம் பேர் தான் முதல் தவணை தடுப்பூசியும், 21 விழுக்காடு தான் இரண்டாம் தவணை தடுப்பூசி போட்டுள்ளனர். முதியவர்கள் தடுப்பூசிக்கு முக்கியத்துவம் கொடுத்து விரைந்து தடுப்பூசியை செலுத்திக் கொள்ள வேண்டும். தமிழகத்தில் மொத்தமாக 3.98 கோடி பேர் 68 விழுக்காடு பேர் முதல் தவணை தடுப்பூசியும், 1.5 கோடி 26 விழுக்காடு பேர் இரண்டாம் தவணை தடுப்பூசியும் செலுத்தி உள்ளனர்.
* கொரோனாவால் உயிரிழந்த 87% பேர் 2ம் தவணை தடுப்பூசி செலுத்தாதவர்கள்* மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மை செயலாளர் தகவல்