தமிழகத்தில் 1,140 பேருக்கு கொரோனா

சென்னை: தமிழகத்தில் நேற்று புதிதாக 1,140 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி 17 பேர் உயிரிழந்துள்ளனர்.

இது குறித்து சுகாதாரத்துறை நேற்று வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் நேற்று 1,25,158 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 1,140  பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 26,94,089 ஆக உள்ளது. 1,374 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.

அதன்படி குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 26,44,805 ஆக உள்ளது. கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று தனியார் மருத்துவமனையில் 4 பேரும், அரசு மருத்துவமனையில் 13 பேர் என 17 பேர் உயிரிழந்துள்ளனர். அதன்படி இதுவரை 36,004 பேர் உயிரிழந்துள்ளனர். அதிகபட்சமாக நேற்று சென்னையில் 141 பேர், கோவையில் 132 பேர், என 2 மாவட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மற்ற மாவட்டங்களில் பாதிப்பு எண்ணிக்கை 100க்கும் கீழ் குறைந்துள்ளது.

Related Stories: