சென்னை: தமிழகத்தில் நேற்று புதிதாக 1,140 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி 17 பேர் உயிரிழந்துள்ளனர்.
இது குறித்து சுகாதாரத்துறை நேற்று வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் நேற்று 1,25,158 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 1,140 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 26,94,089 ஆக உள்ளது. 1,374 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.