சின்னாளபட்டி: ஆத்தூர் காமராஜர் நீர்த்தேக்கத்திற்கு மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியான புல்லாவெளி, மணலூர், பெரும்பாறை பகுதிகளில் பெய்யும் மழைநீர் வருகிறது. வரும் வழியில் பெரிய கன்னிமார் கோவில் அருகே நரசிங்கபுரம் ராஜவாய்க்காலுக்கும், ஆத்தூர் ராஜவாய்க்காலுக்கும் மழைநீர் செல்கிறது. 23.5அடி கொள்ளவு உள்ள ஆத்தூர் காமராஜர் நீர் தேக்கத்தின் தண்ணீர் மட்டம் கோடை வெயிலின் காரணமாக கிடுகிடுவென குறைந்து வந்தது. இந்நிலையில் கடந்த 15நாட்களுக்கு முன்பு தொடர்மழை காரணமாக அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது.