சென்னை: மனிதஉரிமை பெயரை தனியார் அமைப்புகள் பயன்படுத்தினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும என டிஜிபி சைலேந்திரபாபு ஆணையிட்டுள்ளார். அனைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள், காவல் ஆணையர்களுக்கு தமிழக டிஜிபி சைலேந்திரபாபு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். மனித உரிமை பெயரில் வாகனங்களில் போலியாக ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டு சுற்றுவோர் மீது நடவடிக்கை எடுக்கலாம் என கூறினார்.