கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அடுத்த கவரப்பேட்டை பகுதி சென்னை - கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் தனிப்படை போலீஸ் எஸ்ஐக்கள் மாரிமுத்து, பாஸ்கர், காவலர்கள் குமரன், ராஜசேகர் ஆகியோர் நேற்று முன்தினம் இரவு தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த மினி லாரியை மடக்கி சோதனையிட்டனர். அதில், மூட்டை, மூட்டையாக சுமார் இரண்டரை டன் ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.