4 மாவட்டங்களில் கனமழை. 6 நாட்களுக்கு தொடர் மழை பெய்யும் : வானிலை ஆய்வு மையம்

சென்னை : தமிழக கடற்கரையை ஒட்டி நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக இன்று சேலம், புதுக்கோட்டை ,மதுரை, இராமநாதபுரம் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளஅறிக்கையில், கன்னியாகுமரி ,திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர் ,சிவகங்கை ,நாகப்பட்டினம் ,மயிலாடுதுறை, தஞ்சாவூர் ,திருவாரூர் ,அரியலூர் ,பெரம்பலூர், கள்ளக்குறிச்சி ,விழுப்புரம், கடலூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை  பெய்ய கூடும்.

நாளை மற்றும் நாளை மறுநாள் தென்மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் ( கன்னியாகுமரி ,திருநெல்வேலி ,தூத்துக்குடி ,ராமநாதபுரம், விருதுநகர் ,சிவகங்கை ,மதுரை ,வேலூர், திருப்பத்தூர் ,திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி ,சேலம், நாமக்கல், திருப்பூர் ,கோவை, ஈரோடு ,கரூர் ,திருச்சி, அரியலூர் ,பெரம்பலூர், தேனி ,திண்டுக்கல், தென்காசி) மாவட்டங்களில் பெரும்பாலான மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கன மழையும் , ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிக கனமழை பெய்யக்கூடும்.

வருகின்ற 22ம் தேதி மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய கோயமுத்தூர், நீலகிரி மாவட்டங்கள் ,டெல்டா மாவட்டங்கள் மற்றும் சேலம், கிருஷ்ணகிரி, தர்மபுரி, ஈரோடு மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யக்கூடும். 23ம் தேதி வேலூர் ,திருப்பத்தூர் ,திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி ,தர்மபுரி ,சேலம், நாமக்கல் ,திருப்பூர், கோவை, ஈரோடு ,கரூர், திருச்சி, அரியலூர், பெரம்பலூர் ,தேனி ,திண்டுக்கல் ,மதுரை, தென்காசி மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.

சென்னையைப் பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.  நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும்.  நாளை மற்றும் நாளை மறுநாள் குமரிக்கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். அதேபோல் கேரள கடலோர பகுதி, மாலத்தீவு ,லட்சத்தீவு மற்றும் தென்கிழக்கு அரபி கடல் பகுதிகளில் சூறாவளி காற்று 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசும் என்பதால் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Related Stories: