சென்னை: நெஞ்சுவலி காரணமாக சிகிச்சை முடிந்து வீட்டிற்கு திரும்பிய போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் நேற்று வழக்கம் போல் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் தனது பணியை தொடங்கினார். அப்போது அலுவலகம் வந்த கமிஷனருக்கு போலீசார் உற்சாக வரவேற்பு அளித்தனர். சென்னை வேப்பேரில் உள்ள போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கடந்த வியாழக்கிழமை மதியம் போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் பணியில் இருந்த போது திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. உடனே அவரது பாதுகாப்பு அதிகாரிகள், கமிஷனரை மீட்டு கீழ்ப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் முதல் உதவி அளித்தனர். பிறகு ஆம்புலன்ஸ் மூலம் ஆயிரம்விளக்கு பகுதியில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.