சென்னை: சென்னையில், வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன் தலைமையில் வனத்துறைக்கான மேம்பாட்டுப் பணிகள் குறித்து வனத்துறை உயர் அலுவலர்களுடன் ஆய்வுக்கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்தில், பசுமைத் தமிழகத் திட்டத்தின்படி தமிழ்நாட்டில் வனப்பரப்பை 33 சதவீதம் உயர்த்துவது, 5 ஏக்கர் கீழ் உள்ள தனியார் நிலங்களுக்கு வனப்பாதுகாப்பு சட்டத்திலிருந்து விலக்களிப்பது, சோலை மரங்களை நடவு செய்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது. மேலும், 100 எண்ணிக்கைக்கு குறைவாக சில்வர் ஓக் மரங்களை வெட்டும் நடைமுறைகளை எளிமைப்படுத்துவது, தமிழ்நாடில் மரஅறுவை நிலையங்களுக்கு உரிமம் வழங்குவது, பள்ளிகரணை சதுப்புநில மேம்பாட்டிற்காக கூடுதல் நிதியைப்பெறுதல், பழுதடைந்த வனச்சாலைகளை சீரமைத்தல் மற்றும் நெடுஞ்சாலைப் பணிக்காக தடையில்லா சான்று உடனடியாக வழங்குவது குறித்து அதிகாரிகளுக்கு அமைச்சர் அறிவுரை வழங்கினார்.