ஊரக வளர்ச்சித்துறை சார்ந்த அனைத்து அறிவிப்புகளையும் முழுவீச்சில் செயல்படுத்த வேண்டும்: அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் அறிவுறுத்தல்

சென்னை: தமிழக அரசு வெளியிட்ட அறிக்கை: ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் துறையின் பணிகள் மேம்பாடு குறித்து ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்குநரகத்தில் நேற்று ஆய்வு நடத்தினார். இதில் ஊராட்சித்துறை இயக்குநர் பிரவீன் பி.நாயர், கூடுதல் இயக்குநர்கள் மற்றும் முதன்மை பொறியாளர்கள் கலந்து கொண்டனர். இந்த ஆய்வுக்கூட்டத்தில் அரசினால் வெளியிடப்பட்டுள்ள பல்வேறு ஊரக வளர்ச்சித்துறை அறிவிப்புகளை செயல்படுத்துதல் அதன் தற்போதைய நிலை குறித்து அமைச்சர் ஆய்வினை மேற்கொண்டார்.

மேலும் எதிர்வரும் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ளும் வகையில் ஊரக வளர்ச்சித்துறையினால் எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், தூய்மை பாரத இயக்கப்பணிகள் போன்றவற்றை ஆய்வு செய்தார். இக்கூட்டத்தில் பணிகளை குறித்த காலத்தில் முடித்து சிறப்பான சேவையினை வழங்குவதில் துறை அலுவலர்கள் திட்டமிட்டு, சிறப்புடன் செயல்பட வேண்டும். ஊரக வளர்ச்சித்துறை சார்ந்த அனைத்து அறிவிப்புகளையும் உடனடியாக முழுவீச்சில் செயல்படுத்தி உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள அமைச்சர் அறிவுத்தினார். இவ்வாறு தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: