சென்னை: சென்னையில் கொரோனா பரவல் காரணமாக விமான போக்குவரத்து தடைப்பட்டிருந்த நிலையில், ஒன்றரை ஆண்டுகளுக்கு பின் உள்நாட்டு விமானங்களின் எண்ணிக்கை 224 ஆக உயர்ந்திருக்கிறது. பயணம் செய்வோர் எண்ணிக்கையும் கணிசமாக உயர்ந்தது. நாடு முழுவதும் கொரோனா 2ம் அலை பரவல் குறைந்து வருவதால் உள்நாட்டு விமான நிலையங்களில் 100 சதவீதம் பயணிகளுடன் விமானங்களை இயக்க ஒன்றிய சிவில் விமான போக்குவரத்துத்துறை அமைச்சகம் அனுமதி அளித்திருக்கிறது. அதற்கேற்ப சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் விமானங்கள் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது. கொரோனா 2வது அலை பெருமளவு குறைந்து வருவதால் பொதுமக்கள் கூடுதல் உற்சாகத்துடன் தங்களுடைய பயணங்களை மேற்கொண்டு வருகின்றனர்.