ஜுன்ஜுனு: விவசாயிகளின் கோரிக்கையை ஏற்காவிட்டால் உத்தரப்பிரதேச தேர்தலில் பாஜக தோல்வி அடையும் என்று மேகாலயா ஆளுநர் சத்யபால் மாலிக் தெரிவித்துள்ளார். மேற்கு உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த ஜாட் தலைவரான சத்யபால் மாலிக் தற்போது மேகாலயா ஆளுநராக உள்ளார். ராஜஸ்தான் மாநிலம் ஜுன்ஜுனு மாவட்டத்தில் நடந்த விழா ஒன்றில் பங்கேற்ற அவர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது; விவசாயிகள் கோரும் குறைந்தபட்ச ஆதார விலையை ஒன்றிய அரசு தர முன்வந்தால் போராட்டம் முடிவுக்கு வரும் என தெரிவித்தார்.