சோழவந்தான்: சோழவந்தானில் ஆபத்தான தொலைபேசி நிலைய சுற்றுச்சுவரால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். சோழவந்தானில் பி.எஸ்.என்.எல் தொலைபேசி நிலையம் நகரி சாலையில் உள்ளது. சில வருடங்களுக்கு முன் அதிக வாடிக்கையாளர்களுடன் செயல்பட்ட இந்நிறுவனம் தற்போது தனியார் அலைபேசியின் வரவாலும், 4 ஜி இணையதள சேவை உள்ளிட்ட சேவைக் குறைபாடுகளாலும் குறைந்துவிட்டது. ஊழியர்களும் குறைந்த அளவே உள்ளனர். சுமார் 30 வருடங்களுக்கு முன் அலுவலகம் கட்டப்பட்டது. இதற்கு சுமார் 15 அடி உயரத்தில் மின் வேலியுடன் சுற்றுச்சுவர் கட்டப்பட்டது.