டெல்லி: முல்லை பெரியாறு அணை வலுவாக இருப்பதால் இனி அணையின் பாதுகாப்பு பற்றி பேச எதுவும் இல்லை என உச்சநீதிமன்றத்தில் ஒன்றிய அரசு அறிக்கை தாக்கல் செய்துள்ளது. முல்லை பெரியாறு அணையின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு அணையின் நீர்மட்டத்தை குறைப்பதோடு அணையின் பாதுகாப்பு தன்மையை ஆய்வு செய்ய சர்வேதேச நிபுணர் குழு அமைக்க வேண்டும் என கேரளாவின் இடுக்கி மாவட்டத்தை சேர்ந்த ரசூல் ராய் என்பவர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கில் ஒன்றிய அரசு சார்பில் அறிக்கை ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.