சென்னை: பொன்னேரி அடுத்த திருவேங்கடபுரம் பகுதியை சேர்ந்த சத்தியநாராயணன்(53), பொன்னேரியில் உள்ள மீன்வளத்துறை அலுவலகத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வந்தார். இவர், நேற்று தனது வீட்டில் எரிந்த நிலையில் சடலமாக கிடந்தார். தகவலறிந்து வந்த போலீசார், சடலத்தை கைப்பற்றி, விசாரணை நடத்தி வருகின்றனர்.