திருத்தணி: திருத்தணி பகுதியில் இருந்து ஆந்திராவுக்கு ரேஷன் அரிசி மூட்டைகள் கடத்திய வாலிபரை கைது செய்து, லாரியை பறிமுதல் செய்தனர். திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அடுத்த ராமஞ்சேரி கிராமத்தில் இருந்து ஆந்திராவுக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக மாவட்ட போலீஸ் எஸ்பி.வருண்குமாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவரின் உத்தரவின்படி, சிறப்பு படை உதவி ஆய்வாளர் குமார் தலைமையில் போலீசார் நேற்று மாலை ராமஞ்சேரி பகுதியில் வாகன சோதனை நடத்தினர். அப்போது அவ்வழியாக வந்த வாகனங்களை மறித்து சோதனை நடத்தியபோது ஒரு மினி லாரியில் 50 மூட்டை ரேஷன் அரிசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.