கோயம்பேடு பேருந்து நிலையத்தில் 2 முதியவர்கள் மர்ம மரணம்

அண்ணாநகர்: கோயம்பேடு பேருந்து நிலைய 2வது நடமேடையில் நேற்று காலை 55 வயது மதிக்கதக்க முதியவரும், அருகில் உள்ள கழிவறையில் 60 வயது மதிக்கதக்க மூதாட்டியும் மர்மமான முறையில் இறந்து கிடந்தனர். தகவலறிந்து வந்த  கோயம்பேடு போலீசார்,  அந்த சடலங்களை மீட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்குப்பதிவு செய்து, இறந்து கிடந்தவர்கள் யார் என விசாரித்து வருகின்றனர்.

Related Stories: