பள்ளிகளை திறக்கும்படி கோரிக்கை வைத்தார்.! தொலைபேசியில் தொடர்பு கொண்டு மாணவியிடம் பேசினார் முதல்வர்

சென்னை: பள்ளிகளைத் திறக்கும்படி கோரிக்கை விடுத்து, கடிதம் எழுதிய ஆறாம் வகுப்பு மாணவி பிரஜ்னாவுடன் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு, ஓசூர் டைட்டன் டவுன்ஷிப்பைச் சேர்ந்த ரவிராஜன்-உதயகுமாரி ஆகியோரின் மகள் பிரஜ்னா, பள்ளிகளைத் திறக்கும்படி கோரிக்கை விடுத்து கடிதம் எழுதியிருந்தார்.

அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்த அவரது தொலைபேசி எண்ணிற்கு நேற்று (15ம் தேதி) தொடர்புகொண்டு பேசிய தமிழக முதல்வர், நவம்பர் 1ம் நாள் பள்ளிகளைத் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், அப்படித் திறக்கப்படும்போது அம்மாணவி பள்ளிக்குச் செல்லலாம், கவலைப்பட வேண்டாம் என்றும் கூறியதோடு, ஆசிரியர்கள் கூறுவதைக் கேட்டு தனிமனித இடைவெளியை பின்பற்றுதல், முகக்கவசம் அணிந்துகொள்ளுதல் உள்ளிட்ட கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை முறையாகப் பின்பற்றுமாறும் அறிவுறுத்தி, நன்றாக படிக்க வேண்டும் என்று வாழ்த்தினார்.

Related Stories: