சென்னை: சென்னை வேப்பேரியில் போ லீஸ் கமிஷனர் அலுவலகம் இயங்கி வருகிறது. 8 மாடி கொண்ட கட்டிடத்தின் 8வது மாடியில் போலீஸ் கமிஷனர் அலுவலகம் உள்ளது. நேற்று முன்தினம் மதியம் அலுவலகத்தில் போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் பல்வேறு வழக்குகள் தொடர்பான கோப்புகளை சரிபார்த்து கொண்டிருந்தார். அப்போது திடீரென கமிஷனர் சங்கர் ஜிவாலுக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. உடனே, அருகில் இருந்த அவரது பாதுகாப்பு அதிகாரிகள் கமிஷனரை மீட்டு கிரீம்ஸ் சாலையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.