சென்னை: கொரோனா கட்டுப்பாடுகளில் கூடுதல் தளர்வு அளிப்பது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். வெள்ளி, சனி, ஞாயற்றுக்கிழமைகளில் கோயில்களை திறக்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ள நிலையில் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்திவருகிறார். சென்னை தலைமை செயலகத்தில் நடக்கும் ஆலோசனையில் தலைமைச்செயலாளர், அமைச்சர்கள் அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர்.