மேலூர் : மேலூர் அருகே 12 வருடங்களுக்கு பிறகு நிரம்பிய அணைக்கட்டை பொதுமக்கள் சென்று ரசித்து வருகின்றனர்.மேலூர் அருகே முன்னாள் அமைச்சர் கக்கன் காலத்தில் அழகர்மலையின் பின்புறம் உள்ள அடிவார பகுதியான கடுமீட்டான்பட்டியில் 27 அடி கொள்ளளவு கொண்ட அணைக்கட்டு கட்டப்பட்டது. இது பெரிய அருவி நீர்தேக்க அணைக்கட்டு என அழைக்கப்பட்டது. இதன் மூலம் சுமார் 700 ஏக்கர் பாசன வசதி பெற்று வருகிறது.தற்போதைய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக தமிழகத்தில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்நிலையில், கடந்த 12 ஆண்டுகளுக்கு பிறகு பெரிய அருவி நீர்தேக்க அணைகட்டு, அதன் முழு கொள்ளளவான 27 அடி நீர் நிரம்பி மறுகால் பாய்ந்து ஓடுகிறது.