தேனி: தேனியில் வட்டார போக்குவரத்துக்கழக அலுவலர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் திடீர் சோதனை நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அவருக்குச் சொந்தமான மதுரை வீட்டிலும் ரெய்டு நடந்தது. தேனி வட்டார போக்குவரத்து அலுவலர் அலுவலகத்தில், நேர்முக உதவியாளராக இருப்பவர் முரளிதரன் (55). இவர், பணி நிமித்தமாக என்ஆர்டி நகரில் வீடு எடுத்து தங்கியுள்ளார். மேலும், மதுரை திருநகரில் சொந்த வீடு உள்ளது. இவர் கடந்த 2018ல் தொழில்நுட்பமல்லாத ஆய்வாளராக பணிபுரிந்தபோது, வருவாய்க்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக ஒரு வழக்கு போடப்பட்டது.