கோத்தகிரி : கோத்தகிரி அருகே பெத்தளா கிராமத்தில் குலதெய்வமான ஹெத்தையம்மனை படுகர் இன மக்கள் ஆண்டாண்டு காலமாக வழிபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் இந்து அறநிலையத்துறை இந்த கோயிலை தங்கள் கட்டுப்பாட்டில் எடுப்பதற்காக அறிவிப்பு பலகை வைத்து உள்ளனர். இதனால் கிராம மக்கள் கொதிப்படைந்தனர். பின்பு முதற்கட்டமாக நேற்று இந்து அறநிலையத்துறையை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து இதற்கு உறுதுணையாக இருந்த நடுஹட்டி கைகாரு தலைவர் நஞ்சன் என்பவரை உடனடியாக பதவியிலிருந்து விலக கோரி கோஷங்கள் எழுப்பப்பட்டன.