சென்னை: நகைகளை திருடும் கும்பல் குறித்து பொதுமக்கள் ‘காவலன் ஆப்’ மற்றும் 100, 112 ஆகிய அவசர எண்களில் தொடர்பு கொள்ள வேண்டும் என்று போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் வேண்டுகோள் விடுத்துள்ளார். வழிப்பறி, திருட்டு, சந்தேக நபர்கள் குறித்து பொதுமக்கள் உடனே காவல்துறைக்கு தகவல் அளிக்க வேண்டும் என்றும் அப்படி அளிக்கப்படும் தகவலின்படி உடனே நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பொதுமக்களுக்கு போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து, போலீஸ் கமிஷனர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: கொரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முகக்கவசம் அணியாமல் இருக்கும் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பொழுதும், அபராதம் விதிக்கும் பொழுதும் போலீசார் யாரும் பொதுமக்கள் அணிந்திருக்கும் தங்க நகைகளை கழற்றி கைப்பைக்குள் பத்திரமாக வைத்து செல்லுங்கள் என சொல்வது இல்லை.