சென்னை: ஒரகடம் டாஸ்மாக் விற்பனையாளர் கொலையின் போது படுகாயமடைந்த மற்றொரு ஊழியர் மார்பில் துப்பாக்கி குண்டு இருந்ததால் போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். ஸ்ரீபெரும்புதூர் அருகே ஒரகடம் அடுத்த வாரணவாசி, பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் துளசிதாஸ் (42), இவர் ஒரகடம் டாஸ்மாக் கடை விற்பனையாளராக பணியாற்றி வந்தார். கடந்த 4ம் தேதி இரவு விற்பனை முடிந்து சென்றபோது பைக்கில் வந்த 2 பேர் கத்தியால், துளசிதாசை சரமாரியாக குத்தினர். தடுக்க முயன்ற சக ஊழியர் ராமுவையும் சரமாரியாக குத்தியுள்ளனர். இதில் துளசிதாஸ் சம்பவ இடத்திலேயே இறந்தார்.