ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டை ஆரணியாற்றில் திடீர் வெள்ளப்பெருக்கால் தரைப்பாலம் சேதம் ஏற்பட்டது. இதனால் கடந்த 2 நாட்களுக்கு பிறகு தரைப்பாலம் சீரமைக்கப்பட்டு ஊத்துக்கோட்டை - திருவள்ளூர் இடையே போக்குவரத்து தொடங்கியது. ஊத்துக்கோட்டை அருகே ஆந்திர மாநிலம் பிச்சாட்டூர், நாகலாபுரம், நந்தனம் ஆகிய பகுதிகளில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு கன மழை பெய்தது. ஆந்திர மாநிலம் நந்தனம் மலைப்பகுதியில் இருந்து மழைநீர் ஆரணியாற்றில் கலந்தது. இந்த தண்ணீரால் ஆரணியாற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால், ஊத்துக்கோட்டை - திருவள்ளூர் இடையே உள்ள தற்காலிக தரைப்பாலத்தின் மையப்பகுதியில் போடப்பட்ட ராட்சத பைப்புகளில் நடுவில் ஓட்டை விழுந்தது.