பூந்தமல்லி: பூந்தமல்லி அருகே மூதாட்டியிடம் நூதன முறையில் நகை பறித்த மர்ம நபர்களை போலீசார் தேடுகின்றனர். பூந்தமல்லி அடுத்த செம்பரம்பாக்கம் பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்தவர் ராஜேஷ்வரி(60), நேற்று சோமங்கலத்திலுள்ள தனது மகள் வீட்டிற்கு செல்வதற்காக செம்பரம்பாக்கம் பஸ் நிலையத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது இரு சக்கரவாகனத்தில் வந்த மர்ம நபர்கள் 2 பேர் ராஜேஸ்வரியின் அருகில் சென்று, `பாட்டி மாஸ்க் ஏன் அணியவில்லை, அதிகாரிகள் இந்தப் பகுதியில் அபராதம் விதிக்கிறார்கள். உடனே கழுத்து மற்றும் கையில் அணிந்திருந்த நகைகளை கழற்றி கைப்பையில் போடுங்கள்’ என மூதாட்டியிடம் கூறியுள்ளனர்.