ஜெயங்கொண்டம் அருகே வீட்டுக்குள் புகுந்த 4 அடி நீளமுள்ள பாம்பு-தீயணைப்பு துறையினர் பிடித்தனர்

ஜெயங்கொண்டம் : ஜெயங்கொண்டம் அருகே செங்குந்தபுரம் கிராமத்தில் மீனாம்படி ஏரி எதிரில் முதலாவது தெருவில் உள்ள ராஜாமணி என்பவருடைய வீட்டினுள் பாம்பு செல்வதை பார்த்து அருகே வசிக்கும் சுதா என்பவர் சப்தம் பேரட்டுள்ளார். ராஜாமணி இல்லாததால் சுதா வீட்டு உரிமையாளர் ராஜாவுக்கு தகவல் கொடுத்தார். ராஜா உடனே தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்துள்ளார். தகவலறிந்து வந்த தீயனைப்பு நிலைய அலுவலர் மோகன் ராஜ் தலைமையிலான வீரர்கள் காமராஜ் உள்ளிட்டவர்கள் வீட்டுக்கு உள்ளே சென்று தேடி பார்த்ததில் 4 அடி நீளமுள்ள சாரை பாம்பு உள்ளே இருந்ததை பாம்பு பிடிக்கும் கருவியை கொண்டு உயிருடன் பிடித்து எடுத்து சென்று அருகிலுள்ள வனப்பகுதியில் விட்டனர்.

Related Stories: