சென்னை: இந்து அறநிலையத் துறையின் சார்பில் அறிவிக்கப்பட்ட 10 கல்லூரிகளில் 4 கல்லூரிகள் தொடங்குவதற்கான அனுமதி அளித்து உயர்கல்வித்துறை அரசாணை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து உயர்கல்வித்துறையின் அரசாணையில் கூறப்பட்டுள்ளதாவது: சென்னை உள்பட 10 இடங்களில் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் தொடங்கப்படும் என்று பேரவையில் அறிவிக்கப்பட்டது. இதையடுத்து இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அரசுக்கு எழுதியுள்ள கடிதத்தில், சென்னை கொளத்தூர், திருச்செங்கோடு, தொப்பம்பட்டி, விளாத்திக்குளம் ஆகிய நான்கு இடங்களில் கல்லூரிகள் தொடங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.