டெல்லி: நாடு முழுவதும் 7 மெகா ஜவுளி மற்றும் ஆடை பூங்காக்கள் அமைக்க ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. நாடு முழுவதும் மெகா ஜவுளி மற்றும் ஆடை பூங்கா அமைப்பதற்கான பி.எம்.மித்ரா திட்டம் நடப்பாண்டிற்கான ஒன்றிய நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டது. தமிழ்நாடு, பஞ்சாப், ஒடிசா, ஆந்திரப்பிரதேசம், குஜராத், ராஜஸ்தான், அசாம், மத்தியப்பிரதேசம் மற்றும் தெலுங்கானா ஆகிய 10 மாநிலங்கள் மெகா ஜவுளி பூங்கா அமைப்பதற்கு ஆர்வம் காட்டியுள்ளன. இந்நிலையில், 4,445 கோடி ரூபாய் மதிப்பிலான மெகா ஜவுளி பூங்கா திட்டத்திற்கு ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.