டெல்டா மாவட்டங்களில் அறுவடை பணி தொடக்கம் கூடுதல் நெல்கொள்முதல் நிலையம் திறக்க வேண்டும்; அரசுக்கு வேல்முருகன் வலியுறுத்தல்

சென்னை: தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: தஞ்சை, திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் நெற்பயிர்கள் அறுவடை பணிகள் தொடங்கி உள்ளன. இதனால், நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில், நெல் கொள்முதல் செய்ய தாமதம் ஆவதாகவும், நெல் மூட்டைகள் மழையில் நனைந்து வீணாவதாகவும் விவசாயிகள் கூறி வருகின்றனர். இதன் காரணமாக பெரு நஷ்டமாவதாகவும் உழவர்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர். எனவே, விவசாயிகளின் நலன் கருதி டெல்டா மாவட்டங்களில் தற்போதுள்ள கொள்முதல் நிலையங்களை திறக்கவும், கூடுதல் கொள்முதல் நிலையங்களை திறக்கவும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories: