தரங்கம்பாடி : தரங்கம்பாடி பகுதியில் சம்பா மற்றும் தாளடி சாகுபடியில் விவசாயிகள் கவனம் செலுத்தி வருகின்றனர். பாய் நாற்றாங்கால் விடுதல், நிலங்களை உழுதல், அன்டை வெட்டுதல், உள்ளிட பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். சம்பா சாகுபடிக்கு சிஆர்1009, சிஆர்சப், சொர்னாசப், உள்ளிட்ட 150 நாள் வயதுடைய நெல்லை பயன்படுத்துகின்றனர். இதுபோல் தாளடி சாகுபடிக்கு ஆடுதுறை 38, ஆடுதுறை 39, ஆடுதுறை46, கோ43, கோ50, ஐஆர்20, மற்றும் ஆந்திரா பொன்னி விதை நெல்களை பயன்படுத்துகின்றனர். இவற்றின் வயது 135 நாளாகும்.