கூடலூர்: நீலகிரி மாவட்டம் மசினகுடி தேவன் எஸ்டேட் பகுதியில் 3 நபர்கள் மற்றும் 30க்கும் மேற்பட்ட கால்நடைகளை புலி அடித்துக்கொன்றது. புலியை பிடிக்க வலியுறுத்தி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அதன்படி கூண்டு வைக்கப்பட்டது. இந்த நிலையில் கடந்த வரம் மங்கள பசுவன் என்ற முதியவரை அடித்துக்கொன்று உடலில் சில பாகங்களை தின்றது. இதனையடுத்து புலியை சுட்டுக்கொல்ல உத்தரவு பிறபிக்கப்பட்டது. முதுமலை புலிகள் காப்பக கள இயக்குநர் வெங்கடேஷ் மற்றும் 2 இணை இயக்குநர்கள் தலைமையில் 10 பேர் கொண்ட குழுவினர் புலியை சுட்டுக் கொல்லும் பணியை துவங்கினர்.4 பேரை அடித்து கொன்ற புலியை மயக்க ஊசி செலுத்தி பிடிக்கும் பணியில் கடந்த 11 நாட்களாக வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.ஆனால் ஆட்கொல்லி புலி வனத்துறையினரின் கண்ணில் சிக்காமல் புதர்களுக்குள் பதுங்கி, பதுங்கி வனத்துறையினரிடம் இருந்து தப்பி வருகிறது. இதனால் புலியை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க முடியாமல் வனத்துறையினர் திணறி வருகின்றனர்.