சென்னை : தமிழ்நாட்டில் அக்டோபர் 10ம் தேதி 5ம் கட்ட மெகா தடுப்பூசி சிறப்பு முகாம்கள் 30,000 இடங்களில் நடைபெறும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் தெரிவித்துள்ளார். சென்னை எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள டெங்கு சிறப்பு சிகிச்சை பிரிவை அமைச்சர் சேகர் பாபு, சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோருடன் நேரில் சென்று மா. சுப்ரமணியன் பார்வையிட்டார்.பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், தமிழ்நாட்டில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் டெங்கு காய்ச்சலின் தாக்கம் அதிகரித்து வருவதாகக் கூறினார்.