காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் பெருந்தேவி தாயாருக்கு 19 கிலோ வெள்ளிகவசத் தடிகளை, ஸ்ரீரங்கம் ஆண்டவன் சுவாமிகள் முன்னிலையில் பக்தர் காணிக்கையாக வழங்கினார். காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் உள்ள பெருந்தேவி தாயாருக்கு விழா காலங்களில் கோயிலுக்கு உள்ளேயே உற்சவ புறப்பாடு நடைபெறுவது வழக்கம். அதன்படி விழாக்காலங்களில் பெருந்தேவித் தாயாரை சுமந்து செல்வதற்கு ஏற்றவாறு, வெள்ளி கவசத் தடிகளை ஸ்ரீரங்கம் ஸ்ரீமத் ஆண்டவன் சுவாமிகள் மடத்தின் சீடரான சென்னையை சேர்ந்த லட்சுமி நரசிம்மன் வழங்கினார்.