சென்னை: தென்காசி மாவட்டம் கோவில்பட்டி தாலுகா ஜமீன் தேவர்குளம் காலனி தெருவை சேர்ந்த வெற்றிமாறன்(48). இவர் தமிழ்நாடு பறையர் பேரவையின் தலைவராக இருந்தார். உள்ளாட்சி தேர்தலில், தென்காசி மாவட்டம் குருவிகுளம் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிட மனு தாக்கல் செய்திருந்தார்.
அதே பதவிக்கு முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கமலா என்பவரின் கணவர் பாலகிருஷ்ணன் மற்றும் அவர் சமூகத்தை சார்ந்த நபர்கள் தங்களது அதிகாரத்தை பயன்படுத்தி, வெற்றி மாறன் தாக்கல் செய்த வேட்புமனுவை நிராகரிக்க செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதை கேட்ட வெற்றிமாறனை, அவரது சாதி பெயரை கூறி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.