கறம்பக்குடி: புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி தாலுக்கா அலுவலகம் எதிரே தீயணைப்பு துறை சார்பாக வட கிழக்கு பருவ மழையையொட்டி பேரிடர் காலங்களில் இருந்து பொதுமக்களை எப்படி பாதுகாத்து கொள்வது என்றும், குறிப்பாக தீயணைப்பு துறையினர் பொது மக்களை எப்படி பாதுகாப்பது பற்றிய மீட்பு விழிப்புணர்வு செயல் விளக்க பயிற்சி நடைபெற்றது. கறம்பக்குடி தீயணைப்பு நிலைய அலுவர் குழந்தைராசு தலைமையில் தீயணைப்பு வீரர்கள் செயல்முறை பயிற்சி மூலம் பொது மக்கள் முன்னிலையில் செய்து காண்பித்தனர்.