சென்னை: மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறையின் மக்களைத் தேடி மருத்துவம் என்ற மகத்தான திட்டம் முதல்வரால் கடந்த ஆகஸ்ட் 5ம் தேதியன்று துவக்கி வைக்கப்பட்டது. இத்திட்டம் துவங்கப்பட்டு நேற்று வரை உயர் ரத்த அழுத்த நோய் உள்ள 6,15,153 பேருக்கும், நீரிழிவு நோய் உள்ள 4,27,728 பேருக்கும், உயர் ரத்த அழுத்த மற்றும் நீரிழிவு நோய் உள்ள 2,99,533 பேருக்கும் மருந்துப் பெட்டகம் வழங்கப்பட்டது.