செங்கல்பட்டு: மாவட்ட கவுன்சிலர் வேட்பாளர் பதவிக்கு அதிமுக சார்பில் போட்டியிடும் மோகனப்பிரியாவுக்கு ஆதரவு தெரிவித்து, அதிமுக ஒன்றிய செயலாளர் சம்பத்குமார் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார். செங்கல்பட்டு மாவட்டம், 20வது வார்டில் மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு அதிமுக சார்பில், ஆலப்பாக்கம் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் கே.சல்குரு என்பவரது மகள் எஸ்.மோகனப்பிரியா போட்டியிடுகிறார். இதுபோல 21வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு அதிமுக சார்பில், ராணி சல்குரு, 20வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு அதிமுக சார்பில் சரளா, ஆலப்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு சத்யபாமா ஆகியோர் போட்டியிடுகின்றனர்.