கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் காலியாக உள்ள பவானிப்பூர் உள்ளிட்ட மூன்று சட்டப்பேரவை தொகுதிகளில் நேற்று முன்தினம் இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில், பவானிப்பூர் தொகுதியில் திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், முதல்வருமான மம்தா பானர்ஜி போட்டியிட்டார். இந்த தேர்தலில் வெற்றி பெற்றால் மட்டுமே, அவர் முதல்வராக நீடிக்க முடியும். இதனால், இத்தேர்தல் முடிவை அரசியல் வட்டாரம் பரபரப்பாக எதிர்பார்த்து காத்திருக்கிறது.