செஞ்சி : ஊரக உள்ளாட்சி தேர்தல் வரும் 6 மற்றும் 9ம் தேதிகளில் இரு கட்டங்களாக நடைபெற உள்ளன. இதனை முன்னிட்டு செஞ்சி ஊராட்சி ஒன்றியம் சத்தியமங்கலம், சோ.குப்பம், வேலந்தாங்கல், சே.பேட்டை, பாக்கம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் திமுக சார்பில் மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் அகிலா பார்த்திபன் மற்றும் ஒன்றியக்குழு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர்கள் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் உதயசூரியன் சின்னத்துக்கு தீவிர வாக்கு சேகரித்தார். சத்தியமங்கலம், சோ.குப்பம், வேலந்தாங்கல், சே.பேட்டை, பாக்கம், நல்லான்பிள்ளைபெற்றாள் ஆகிய பகுதிகளில் வாக்கு சேகரித்த அமைச்சர் மஸ்தான், அப்பகுதியில் உள்ள பெண்களிடம் 4 மாதங்களில் முதல்வர் மு.க.ஸ்டாலின் செய்த சாதனைகளை கூறி வாக்கு சேகரித்தார். தொடர்ந்து அவர் பேசுகையில்: