கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் சில மாதங்களுக்கு முன் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் திரிணாமுல் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சியை தக்கவைத்தது. மம்தா பானர்ஜி முதல்வரானார். ஆனால், நந்தி கிராம் தொகுதியில் போட்டியிட்ட அவர் தோல்வி அடைந்தார். இந்நிலையில், பவானிப்பூர் உட்பட 3 தொகுதிகளுக்கு நேற்று இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடந்தது. இதில், பவானிப்பூரில் மம்தா போட்டியிட்டார். அவரை எதிர்த்து பாஜ.வை சேர்ந்த பிரியங்கா திப்ரிவால் போட்டியிடுகிறார்.