சென்னை: லஞ்ச ஒழிப்புத்துறையினரின் விசாரணைக்கு இன்று ஆஜராக இயலாது என்று அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். முன்னாள் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்த எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கடந்த ஜூலை 22ம் தேதி சோதனை நடத்தினர். இந்த சோதனையின் முடிவில் சொத்து ஆவணங்கள், 25 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகும்படி லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார், எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு சம்மன் அனுப்பியிருந்தனர்.