தானே: மகாராஷ்டிரா மாநிலம், தானே மாவட்டத்துக்கு உட்பட்ட கல்வா பகுதியை சேர்ந்தவர் ராஜ்குமார் யாதவ். இவர் அட்கோனேஷ்வர் நகர் பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு நேற்று கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள சென்றார். பெயரை பதிவு செய்த பின்னர் அவர் தடுப்பூசி போடுவதற்காக வரிசையில் நின்றார். ஆனால், கொரோனா தடுப்பூசி போடும் வரிசையில் நிற்காமல், வெறிநாய் கடிக்கு எதிரான ரேபிஸ் தடுப்பூசி போடும் வரிசையில் தவறுதலாக நின்றார். அங்கிருந்த மருத்துவரும், நர்சும் முறையாக விசாரிக்காமல், அவருக்கு ரேபிஸ் தடுப்பூசியை போட்டுள்ளனர்.