சென்னை: புதுச்சேரி உள்ளாட்சித் தேர்தலில் வேட்பு மனுத்தாக்கலை அக்டோபர் 4ம் தேதிக்கு தள்ளிவைக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. புதுச்சேரியில் உள்ள 5 நகராட்சிகள், 10 பஞ்சாயத்துகளுக்கு தேர்தல் நடத்துவது தொடர்பாக மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டது. இந்த தேர்தலில் பட்டியலினத்தவர்களுக்கு முறையான ஒதுக்கீடு வழங்கப்படாததால் தேர்தல் அறிவிப்புக்கு தடை விதிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் முத்தியால்பேட்டை தொகுதி சுயேச்சை எம்.எல்.ஏ. பிரகாஷ்குமார் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவானது தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, நீதிபதி ஆதிகேசலு ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.