சென்னை: அண்ணா பல்கலைக்கழகத்தின் புதிய பதிவாளர் யார் என்பதை தீர்மானிப்பதற்கான சிண்டிகேட் குழு கூட்டம் துணைவேந்தர் வேல்ராஜ் தலைமையில் நேற்று நடந்தது. அண்ணா பல்கலையின் புதிய துணைவேந்தராக நியமனம் செய்யப்பட்ட வேல்ராஜ் தலைமையில் 263வது சிண்டிகேட் குழு கூட்டம் நேற்று நடந்தது. இக்கூட்டத்தில் சிண்டிகேட் உறுப்பினர்களான உயர்கல்வித்துறை செயலாளர் கார்த்திகேயன், தொழில்நுட்பக் கல்வி இயக்குனர் லட்சுமி பிரியா, தனியார் கல்லூரிகள் சார்பில் கிஷோர், மலர்விழி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.