உள்ளாட்சித் தேர்தலால் 9 மாவட்டங்களில் அக்.,6 மற்றும் 9 தேதி பொது விடுமுறை: அரசு அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் அக்டோபர் 6 மற்றும் 9ம் தேதிகளில் 2 கட்டங்களாக ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு அன்றைய தினம் 9 மாவட்டங்களுக்கு மட்டும் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை நேற்று வெளியிட்ட அறிவிப்பு: காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களில் 6.10.2021 மற்றும் 9.10.2021 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக நடைபெற உள்ள தமிழ்நாடு சாதாரண ஊரக உள்ளாட்சி தேர்தல், 2021ஐ முன்னிட்டு 6.10.2021 மற்றும் 9.10.2021 ஆகிய தேதிகளில் தேர்தல் நடைபெற உள்ள பகுதிகளுக்கு மட்டும் பொது விடுமுறையும் ஏனைய 28 மாவட்டங்களில் 9.10.2021 அன்று நடைபெற உள்ள தற்செயல் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள பகுதிகளுக்கு மட்டும் பொது விடுமுறையும் அறிவிக்கப்படுகிறது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Related Stories: